டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பொறுப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahul Gandhi : ராகுலை தொடர்ந்து காங்கிரஸிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்!- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி அடைந்ததால் ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகளும்ம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி கடந்த 2014 தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் படு தோல்வி அடைந்துள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார். ஆனால் செயற்குழு அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

    Major executives deviate from Congress responsibility following Rahul

    பல முக்கியத்தலைவர்களும் அவரை சந்தித்து சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ராகுளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலக தொடங்கியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் காரியக் கமிட்டிகள் கலைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று காலை மும்பை காங்கிரஸ் கட்சி தலைவர் மிலிந்த் தியோரா தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்குப் பின்னர் பேசிய அவர் "தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் மேம்பாட்டிற்கு தான் முழு ஒத்துழைப்பை வழங்குவேன். மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அரசியல் நிலைப்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தக்க சமயம் வரும் போது, உரிய பதவிகளைப் பெற நாங்கள் தயாராக இருப்போம்" என்று கூறினார்.

    மீண்டும் வேண்டும்.. ரோகிணியே வேண்டும்..சேலத்தில் ரவுண்டு கட்டும் போஸ்டர்கள்! மீண்டும் வேண்டும்.. ரோகிணியே வேண்டும்..சேலத்தில் ரவுண்டு கட்டும் போஸ்டர்கள்!

    மிலிந்த் தியோராவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ராகுலிடம் வழங்கிய அவர் "மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பை ஏற்கிறேன்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்தேன். இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காகவும், எங்கள் கட்சிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறினார் ஜோதிராதித்ய சிந்தியா.

    English summary
    Major executives have resigned from Congress responsibility following Rahul
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X