மணிப்பூர் வன்முறை- உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர் விசாரணை- ஜனாதிபதியிடம் காங். மனு
டெல்லி: மணிப்பூர் மாநில வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான குழு மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஒரு மனு அளித்துள்ளோம். ஜனாதிபதியிடம் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதில் ஒன்று, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் மணிப்பூர் வன்முறை குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்பது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
As a responsible political party, the Indian National Congress is ever ready to lend support to any initiative to restore peace, normalcy and harmony in Manipur.
— Mallikarjun Kharge (@kharge) May 30, 2023
We humbly submit the following 12 demands for immediate action.
Only then there will be peace in the state.
2/2 pic.twitter.com/MNP1ReUNLj