பிரதமர் மோடியின் ஏராளமான பரிசு பொருட்கள்... ஏலம் எடுக்க பலர் ஆர்வம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசு பொருட்களை ஏலம் எடுக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட வெள்ளித்தட்டு ரூ. 30 ஆயிரத்திற்கு ஏலம் போனது. மராட்டிய மன்னர் சந்திரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி வணங்குவது போன்ற புகைப்படம் ரூ. 22 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
இதே போல், ஹனுன் சிலையை ரூ.3, 800 க்கு காசியாபாத்தைச் சேர்ந்த அவ்யான்ஸ் குப்தா என்ற பத்து வயது சிறுவன் ஏலம் எடுத்துள்ளார். பொருட்களை ஏலம் எடுப்பதில் பலருக்கு போட்டி ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது அந்த நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு அளித்த பரிசு பொருட்கள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருட்களான ஓவியங்கள், சிற்பங்கள், இசைக் கருவிகள், சால்வைகள் என சுமார் 1,900 பொருட்கள் ஏலத்தில் விடப்படும். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்கப்படும் என மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.