கடவுள் இருக்கிறாருல்ல! அப்ப கொரோனாவை ஏன் ஒழிக்கலை?.. எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் கட்ஜு
டெல்லி: கடவுள் இருக்கிறார் எனில் அவர் ஏன் கொரோனாவை ஒழிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இதுகுறித்து கட்ஜு தனது ட்விட்டர் பக்கத்தில், கடவுள் இருக்கிறார் எனில் அவர் ஏன் கொரோனாவை ஒழிக்கவில்லை. அவர் இருக்கிறார் எனில் ஏன் "ஏய் கொரோனாவே திரும்பி போ" எனக் கூறவில்லை. ஒருவேளை அவருக்கு மக்களை வேதனைப்படுத்தி பார்க்க பிடிக்குமோ என தாறுமாறாக கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான இவர் எப்போதும் சர்ச்சைக்குரிய உணர்வுப்பூர்வமான கருத்துகளை தெரிவிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9152 ஆக உள்ளது. அதுபோல் பலியானோரின் எண்ணிக்கை 302 ஆக உள்ளது.
If there is a God, why does he not tell corona to buzz off ?
— Markandey Katju (@mkatju) April 12, 2020
Or does he like tormenting people ?
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினால் பலர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவுக்கு அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் கட்ஜு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
If there is a God why does he not eradicate corona ?
— Markandey Katju (@mkatju) April 13, 2020