புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாக்.பதில் அதிருப்தி ஏற்படுத்துகிறது- இந்தியா
டெல்லி: புல்வாமா தாக்குதல் அறிக்கை மீது பாகிஸ்தான் அளித்த பதில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது என இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட போதிலும் இதில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை என அந்நாடு கூறிவந்தது.

புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பிருப்பதாக முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய அரசு பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது. 91 பக்கங்களை கொண்ட அறிக்கையில் 6 பகுதிகளாக உள்ளது.
அதில் 2 மற்றும் 3 பகுதிகள் புல்வாமா தாக்குதலுக்குள்ளானது. அந்த அறிக்கையில் அந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தான் மண்ணில் இருப்பது உள்பட அனைத்து தகவல்களையும் தாக்கல் செய்தது.
இதற்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான், இந்தியா கூறிய 22 இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். ஆனால் அங்கு அவர்கள் கூறுவதை போல் பயங்கரவாத அமைப்புகள் ஏதும் இல்லை,. புல்வாமா தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் 54 பேருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவம் மற்றும் 2016-இல் பதான்கோட் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றில் பாகிஸ்தான் கடந்த காலங்களில் கூறியதையே தற்போதும் கூறியுள்ளதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.
மசூத் அஸார் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகமே கூறியுள்ளது. இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாகிஸ்தான் பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications