மோடி தலைமையில் சீனியர் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர ஆலோசனை.. அடுத்து என்ன?
Recommended Video
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாதுகாப்பு துறைக்கான அமைச்சர் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி மற்றும் பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான விளக்கத்தை அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் அளித்தனர். மேலும் பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்தினால் எந்த மாதிரி சமாளிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Delhi: Meeting of Cabinet Committee on Security underway at 7, LKM pic.twitter.com/sCq0MZSB2u
— ANI (@ANI) February 26, 2019
இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் இன்று ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.