கொரோனா லாக்டவுன்கள்- வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள்
டெல்லி: கொரோனா லாக்டவுன்களால் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொன்டுள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிக கொடூரமானதாக உருவாகி உள்ளது. பல லட்சம் மனித உயிர்களை குடிக்கும் கொடூர கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் லாக்டவுன்களை அமல்படுத்தின.
வெளிநாடுகளில் தத்தளிக்கும் இந்தியரா நீங்கள்? தாயகம் திரும்ப நீங்கள் பதிவு செய்ய வேண்டிய இணையதளங்கள்
இந்த லாக்டவுன்களால் வெளிநாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் பரிதவித்து வருகின்றனர். விமானம், கப்பல் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டதால் 40 நாட்களுக்கும் மேலாக இவர்கள் தத்தளித்து வருகின்றனர்.
இப்படி வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அங்குள்ள தூதரகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதன் கூடுதல் விவரங்கள்:
MHA issues SOPs for movement of Indian Nationals stranded outside the country, as well as, for those persons stranded in India who are desirous to travel abroad for urgent reasons.#COVID19 pic.twitter.com/YK7bwUf6sp
— Prasar Bharati News Services (@PBNS_India) May 5, 2020