இத்தனை நாள் ஜியோவுக்கு மிஸ்டு கால் கொடுத்திருப்பீங்க.. இனி ஜியோ நம்பரில் இருந்தே மிஸ்டுகால் வரும்
Recommended Video
டெல்லி: இத்தனை நாள் ஜியோ நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்திருப்பீங்க.. இன்று முதல் ஜியோ நம்பரில் இருந்தே மிஸ்டுகால் வரப்போகுது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேச கட்டணம் என்ற அறிவிப்பால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு அழைப்புக்கும் 6 பைசா என்ற ஐயூசி சார்ஜ்ஜை இதுவரை ஏற்றுக்கொண்ட ஜியோ இனி இந்த சுமையை ஏற்க முடியாது என்று வாடிக்கையாளர்களின் தலையில் கட்டியிருக்கிறது.
இதற்கு காரணம் இந்த ஐயூசி சார்ஜை 2020 ஜனவரியில் முடிவதாக இருந்ததை தொடரப்போவதாக டிராய் அறிவித்து இருப்பதே காரணம் ஆகும்.
ஜோசியர் ஓகே சொல்லிட்டாராம்.. ரஜினி கண்டிப்பா வர்றாராம்.. எப்பன்னுதான் தெரியல.. டிஸ்கஷன் ஓடுதாம்!
இருப்பினும் ஜியோ வாடிக்கையாளர்கள் 10 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்தால் மற்ற நெட்வொர்க்குடன் 124 நிமிடங்கள் பேசலாம். அதாவது கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசலாம். இதேபோல் 20 ரூபாக்கு ரீசார்ஜ் செய்தால், 249 நிமிடங்களும், 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 656 நிமிடங்கள் பேசலாம் என்றும் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1362 நிமிடங்கள் பேசலாம் என்றும் அறிவித்துள்ளது.
இதனால் பெரிய பாதிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்றாலும், ஒரு சில நேரங்களில் ரீசார்ஜ் பணம் தீர்ந்தால் நிச்சயம் மிஸ்டுகால் கொடுக்க வேண்ய நிலைக்கு தள்ளப்படலாம். அவசரத்திற்கு பேச வேண்டும் என்றாலும் 6 காசு இருந்தால் தான் முடியும். ஜியோ மட்டுமில்லீங்க எல்லா நிறுவனங்களும் இதே காசை வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது.