இவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்
டெல்லி: டெல்லியில் காற்று மாசு குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத கவுதம் காம்பீர் குறித்து தலைநகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து இவருக்கு கிழக்கு டெல்லி எம்பி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கட்சித் தலைமை வழங்கியது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரங்களில் இவர் உள்ளே குலுகுலு ஏசியில் உட்கார்ந்து கொண்டு வேகாத வெயிலில் வாக்கு கேட்க தன்னை போல் இருக்கும் ஒருவரை ஏற்பாடு செய்ததாக புகார்கள் இவர் மீது வந்தன. எனினும் கிழக்கு டெல்லியில் கவுதம் காம்பீர் வெற்றி பெற்றார்.
வாட்ச்சில் தமிழை புகுத்திய டைட்டன் நிறுவனம்.. நம்ம தமிழ்நாடு என பெயரிட்ட சுவாரஸ்யம்
சுவாசிக்கும் ஆக்ஸிஜன்
அது மட்டுமல்லாமல் அங்குள்ள அனைத்து எம்பி தொகுதிகளிலும் பாஜகவே வென்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக டெல்லியில் காற்று மாசு பாடாய்படுத்தி வருகிறது. மக்களால் நல்ல காற்றை சுவாசிக்கக் கூட முடியாமல் ஆக்ஸிஜனை காசு கொடுத்து வாங்கி சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதிநிதி
இதற்காக வாகன கட்டுப்பாட்டு முறை என கொண்டு வந்தாலும் காற்று மாசு குறைந்தபாடில்லை. இந்த நிலையில் காற்று மாசு குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த 15-ஆம் தேதி டெல்லியில் நிகழ்ந்தது. அந்த கூட்டத்தில் டெல்லி கிழக்கு தொகுதியின் பிரதிநிதி என்ற முறையில் காம்பீர் கலந்து கொள்ளவேயில்லை.
காம்பீர்
அதற்கு மாறாக இந்தியா- வங்கதேசம் விளையாடி வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக பணியாற்ற சென்றுவிட்டார். இந்த கூட்டத்தில் மொத்தம் 29 எம்பிக்களுக்கு பதிலாக வெறும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் காம்பீர் விவகாரம் பூதாகரமானது.
|
ஒட்டுமொத்த டெல்லி
இந்த நிலையில் டெல்லியில் ஐடிஓ பகுதிகளில் காம்பீர் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் காம்பீர் படத்தை போட்டு, இவரை காணவில்லை. யாரேனும் இவரை பார்த்தீர்களா? கடைசியாக இவர் ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்த டெல்லியே இவரை தேடுகிறது என அந்த போஸ்டரில் அச்சடிக்கப்பட்டிருந்தது.