விடாது கருப்பு... மீண்டும் ‘ஜாதிய’ பிரச்சனையை தேர்தல் பிரசாரத்தில் கையிலெடுத்த மோடி!
டெல்லி: லோக்சபா தேர்தல் களத்தில் மீண்டும் ஜாதிய பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.
தேர்தல் களத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட சாதனைகள் எதனையும் பாஜக முன்வைக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தன.
இதை திசைதிருப்ப தேசப்பற்று, தேசியவாதம் என்றெல்லாம் பேச்சுகள் வெளிப்பட்டன. ஒருகட்டத்தில் என்னை பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி கேலி செய்கிறார் என்று கண்ணீர் வடித்தார் பிரதமர் மோடி.
மோடியை 'டைம்' இதழ் அட்டைப்படம் போட்டு விமர்சிக்க காரணம் என்ன? கடைசியில் 'கண்டுபிடித்துவிட்டது' பாஜக!
இதுவும் விமர்சனத்துக்குள்ளானது. இதிலிருந்தும் மடைமாற்ற ராஜீவ் காந்தி விவகாரங்கள், சீக்கியர் படுகொலை பிரச்சனை 'அந்த காலத்து'க்கு தாவியது பாஜக. இந்நிலையில் தற்போது மீண்டும் ஜாதிய பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார் மோடி.
இன்றைய தேர்தல் பிரசாரத்தின் போது, எனது ஜாதி குறித்து காங்கிரசார் தேடுகிறார்கள். நான் எந்த ஜாதி என்பதை விவாதமாக்குகிறார். நான் ஏழைகளின் ஜாதியைச் சேர்ந்தவர். ஏழைகள் என்கிற ஜாதிதான் என்னுடையது என உருக்கமாக பேசி இருக்கிறார் மோடி.
இன்னும் எத்தனை வருமோ!