ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு பத்தமடை புகழ் கோரைப் பாயை பரிசாக வழங்கிய மோடி
: திருநெல்வேலி மாவட்டத்தின் பத்தமடை பட்டுப் பாயை ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு, பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
டெல்லி: திருநெல்வேலி மாவட்டத்தின் பத்தமடை பட்டுப் பாயை ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு, பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் பல்வேறு கைவினைப் பொருட்களை அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களுக்கும் பரிசளித்துள்ளார் பிரதமர் மோடி.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே மூலம் 2007ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் வீழ்ச்சி அடைந்த இந்த அமைப்பு 2017ம் ஆண்டு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அமைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுவதும் உண்டு. குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் ஜப்பான் சென்றுள்ளனர்.
ஒரே வாரத்தில் ’டைவ்’ அடித்த 3 முக்கிய தலைவர்கள்.. இப்படி இருந்தா காங்கிரஸை எப்படி பலப்படுத்துறது?
இந்த நிகழ்வின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதுபோல, ஜப்பான் முன்னாள் பிரதமர், ஆஸ்திரேலியா பிரதமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஆகியோருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
அமெரிக்க அதிபருக்கு பரிசு
சஞ்சி கலை வடிவத்தை சித்தரிக்கும் ஓவியம் அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு வழங்கப்பட்டது. இந்த சிக்கலான சஞ்சி பேனல் தேசிய விருது பெற்ற மதுராவிலிருந்து வரும் தாக்குராணி காட் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. சாஞ்சி, காகிதத்தில் கையை வெட்டும் கலை, கிருஷ்ணரின் புகழ்பெற்ற இல்லமான உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவின் ஒரு பொதுவான கலை வடிவமாகும். பாரம்பரியமாக பகவான் கிருஷ்ணரின் கதைகளில் இருந்து உருவங்கள் ஸ்டென்சில்களில் உருவாக்கப்படுகின்றன. இந்த ஸ்டென்சில்கள் கத்தரிக்கோல் அல்லது கத்தியைப் பயன்படுத்தி சுதந்திரமாக வெட்டப்படுகின்றன. மென்மையான சஞ்சி பெரும்பாலும் மெல்லிய காகிதத் தாள்களால் ஒன்றாக இணைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா பிரதமருக்கு பரிசு
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினரின் புகழ்பெற்ற கலை வடிவமான கோண்ட் ஓவியங்களை ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். கோண்ட் கலை ஆஸ்திரேலியாவின் பழங்குடியினக் கலைக்கு மிகவும் ஒத்ததாகக் கருதப்படுவதால், இந்த பரிசு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதிவாசிகள் படைப்பைப் பற்றி கோண்டுகளைப் போலவே சொந்தக் கதைகளைக் கொண்டுள்ளனர்.
மரத்தால் செய்யப்பட்ட பெட்டி
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு ரோகன் ஓவியம் வரைந்த மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பெட்டியை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.ரோகன் ஓவியம் என்பது பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் துணி அச்சிடும் கலையாகும். இந்த கைவினைப்பொருளில், வேகவைத்த எண்ணெய் மற்றும் காய்கறி சாயங்களிலிருந்து வண்ணப்பூச்சு தயாரிக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த கைவினை கிட்டத்தட்ட அழிந்தது, ரோகன் ஓவியம் ஒரு குடும்பத்தால் மட்டுமே வரையப்பட்டு வருகிறது.
பத்தமடை பாய் பரிசளித்த மோடி
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது ஷின்ஷோ அபேவுக்கு தமிழகத்தின் பெருமையான திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தயாரிக்கப்படும் பாயைப் பரிசாக வழங்கினார். திருநெல்வேலியில் சிறிய நகரான பத்தமடை, பாய் தயாரிப்புக்கு பிரபலமாக விளங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வளர்க்கப்படும் 'கோரை' புல்லில் இருந்து பட்டுப் பாய் தயாரிக்கும் தொழில் பிரபலமாக இருந்துவருகிறது. சில்க் அல்லது பருத்தியைப் பயன்படுத்தி கைத்தறி மூலம் இந்தப் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஜப்பானுக்கு சென்ற தமிழகத்தின் பெருமை
இந்தப் பாய்கள் தயாரிக்கப்படும் கோரைப் புற்கள், தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் தமிழ்நாடு, கேரளாவிலுள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் மிகுதியாக வளர்கின்றன. பத்தமடை பாய்கள் மிகவும் மிருதுவாகவும், நன்கு மடியக் கூடியதாகவும் இருப்பது அதன் தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மிகத் துல்லியமாகவும், மிகவும் நெருக்கமாகவும் நெய்யப்பட்ட பத்தமடை பாய்கள் பட்டுப் பாய்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் துணி போன்ற உணர்வைக் கொடுப்பதால் அப்படி அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் பெருமையை ஜப்பானுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்.