சிபிஐ மட்டுமில்லை, சில முதுகெலும்பு இல்லாத மீடியாக்களும்தான் காரணம்.. ராகுல் காந்தி கடும் சீற்றம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரான, ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கை குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியும் இணைந்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில் கூறியுள்ளதாவது: மோடி அரசு சிதம்பரத்தின் மரியாதையை குலைக்க முதுகெலும்பு இல்லாத சில ஊடகங்கள், அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இழிவானமுறையில், இப்படி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியும், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்தார். சிதம்பரம் வேட்டையாடப்படுவதாக அவர் சாடியிருந்தார்.
Modi's Govt is using the ED, CBI & sections of a spineless media to character assassinate Mr Chidambaram.
— Rahul Gandhi (@RahulGandhi) August 21, 2019
I strongly condemn this disgraceful misuse of power.
காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இது பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர். இதனால், சிதம்பரத்திக்கு எதிரான வழக்கு அரசியல் ரீதியாகவும் இப்போது முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.