ஒரு சுனாமி போல வந்து சுழற்றிப் போட்டு விட்டுப் போன மோடி - அமித் ஷா!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் ஸ்டிரைக் ரேட், காங்கிரஸின் ராகுல் காந்தி - பிரியங்கா காந்தியை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.
மோடி மொத்தம் 145 கூட்டங்களில் பேசினார். அவர் பிரச்சாரம் செய்த இடங்களில் 90 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ராகுல் காந்தி 115 கூட்ட்களில் பேசினார். ஆனால் 28 காங்கிரஸ் வேட்பாளர்களை மட்டுமே அவரால் வெற்றி பெற வைக்க முடிந்தது. அவரது தங்கை பிரியங்கா காந்தி இன்னும் மோசம். 37 இடங்களில் பேசி 8 பேரை மட்டுமே இவர் கரையேற வைத்துள்ளார்.
தமிழகத்தில் இந்த தேர்தல் ரிசல்ட் ரொம்ப ரொம்ப வித்தியாசமானது.. பல வகையில் ஸ்பெஷலானது.. ஏன் தெரியுமா?
மறுபக்கம் பாஜக தலைவர் அமித் ஷா 137 கூட்டங்களில் பேசி 83 பேரை ஜெயிக்க, வைத்துள்ளார். மோடியும், அமித் ஷாவுமாகஇணைந்து 57% ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளனர். அதேசமயம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இணைந்து வைத்துள்ள ஸ்டிரைக் ரேட் வெறும் 21% தான்.
இந்தி பேசும் மாநிலங்களை மொத்தமாக வாரி எடுத்துள்ளது பாஜக. இங்கெல்லாம் கடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் அது தோற்றிருந்தது. ஆனால் அத்தனையையும் அது திரும்பப் பெற்று விட்டது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி கேரளா, பஞ்சாப், சட்டிஸ்கரில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.
செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!
சுருங்கச் சொன்னால் சுனாமி போல வந்து காங்கிரஸ் மற்றும் கூட்டணியைக் காலி செய்து விட்டுப் போயுள்ளனர் மோடியும், அமித் ஷாவும்.