தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை உயர்வு!
Recommended Video
டெல்லி: தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள், காவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார், மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்ட முதலாவது அறிவிப்பு இது.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவரை தொடர்ந்து மோடியின் அமைச்சரவையும் பதவியேற்றது.
மத்திய அமைச்சரவையில் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள அமித்ஷாவுக்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Amit Shah gets Home, Nirmala gets Finance, Defence goes to Rajnath
— ANI Digital (@ani_digital) May 31, 2019
Read @ANI Story| https://t.co/1tIqZNiy2M pic.twitter.com/HEiFWT5Nzn