ஆஹா மோடிக்கு ரிசல்ட்டை நினைச்சி பயந்து வந்துடுச்சி.. இதோ இருக்குதே ஆதாரம்.. விளாசும் ராகுல் காந்தி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மிக கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளது அவரது பேட்டிகள், வீடியோக்கள் மூலம் தெரிய வருகிறது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இதுவரை செய்தியாளர்களை சந்திக்காத பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில தினங்களாக கூப்பிட்டு கூப்பிட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். பிரதமரின் உடல் மொழியிலும் வெகுவாக வித்தியாசம் தெரிய ஆரம்பித்துள்ளது.
இதை இன்று வெளியிட்ட ஒரு ட்வீட்டில் ராகுல் காந்தியும், குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதை பாருங்கள்:
Dear Mr Modi,
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2019
Your recent statements, interviews & videos are giving India the distinct feeling that you’re cracking under presssure.
You are, however, certainly right to be nervous about the results.
உங்களின் சமீபத்திய அறிக்கைகள், நேர்காணல்கள் & வீடியோக்கள், நீங்கள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை நாட்டுக்கே எடுத்துக் காட்டுகிறது. தேர்தல் ரிசல்ட்டை நினைத்துதான், கண்டிப்பாக, தடுமாற்றத்தில் உள்ளீர்கள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அடடா, பிரதமர் மோடியா இது.. பவ்யமாக ஆளே மாறிப்போய்.. பத்திரிக்கையாளர்களுக்கே ஆச்சரியம்!