ஒரே ஒரு தொகுதிக்கு.. 3 கட்டமாக தேர்தல்.. ஆச்சரியமூட்டும் அனந்தநாக்!
அனந்தநாக் தொகுதியில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: ஒரே ஒரு தொகுதிதான்... ஆனால் 3 கட்டங்களாக தேர்தல் நடக்க போகிறது... எங்கே தெரியுமா? அனந்தநாக் தொகுதியில்தான்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளதுதான் அனந்தநாக் மக்களவைத் தொகுதி. பொதுவாக ஒரு இடைத்தேர்தல் நடந்தாலும் அங்கே பரபரப்புதான்.. பதற்றம்தான்.
போனமுறை இங்கு இடைத்தேர்தல் நடந்தபோது, கலவரம் வெடித்து பிறகு தலைமை தேர்தல் ஆணையம் தேர்தலையே ரத்து செய்தது.
ஒரு தொகுதியில் போதுமான அளவில் பாதுகாப்பு வீரர்களை வைத்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் அது இந்த தொகுதிதான். வழக்கமான காலங்களிலேயே இவ்வளவு பதற்றம் என்றால் புல்வாமா சம்பவம் நடந்து இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது.
இப்படித்தான் நடக்க போகிறது 7 கட்ட லோக்சபா தேர்தல்.. முழு விவரம் இதோ!
இந்த சமயத்தில் அனந்த நாக் தொகுதியில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக அதாவது ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 6 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஆனால் இந்த அனந்தநாக் தொகுதிக்கு மட்டும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இப்படி 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று ஆணையம் அறிவித்திருக்கிறது