ராஜிவ் காந்தி பற்றி இப்படியா பேசுவது.. மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஊழல்வாதி என்று விமர்சனம் செய்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி இன்று புகார் அளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி நம்பர் 1 ஊழல்வாதியாக மரணமடைந்தார் என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மோடி பேச்சுக்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று டெல்லியில் தலைமை, தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமையிலான குழு இந்த புகாரை அளித்தது.
நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு கூறிய வார்த்தைகள் அப்படியே முழுமையாக, அந்த புகாரில், இடம்பெற்றுள்ளன. மேலும், நரேந்திர மோடி இதுபோல தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகிறார் என்றும், தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக அவர் மீதான புகார்களை தள்ளுபடி செய்து வருவது இதற்கு ஒரு முக்கியமான காரணம். எனவே தேர்தல் ஆணையத்தை, பார்த்து மோடிக்கு பயம் கிடையாது என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்க காலாவதி ஆயிட்டீங்க.. உங்களுக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்.. மமதா பானர்ஜி அதிரடி