மகான் திருவள்ளுவரை வணங்குகிறேன்.. தமிழில் ட்வீட் போட்டு பிரதமர் மோடி அசத்தல்
டெல்லி: மகான் திருவள்ளுவரை வணங்குகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
திருவள்ளுவர் தினம் தை 2-ஆம் தினம் அதாவது ஜனவரி 16-ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழில் ட்வீட் செய்துள்ளார் மோடி. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்.
திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்.
— Narendra Modi (@narendramodi) January 16, 2020
அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன.
சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன.
அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன என்றார்.