தேசிய புதிய கல்விக் கொள்கை 21ம் நூற்றாண்டின் இந்தியாவை வடிவமைக்கும்- மோடி புகழாரம்
டெல்லி: தேசிய புதிய கல்வி கொள்கை 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவை வடிவமைக்கும். புதிய இந்தியாவை வடிவமைக்கும் குடிமக்களை உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரதமர் மோடி தனது தொடர்ச்சியான ஏழாவது சுதந்திர தின உரையை டெல்லி, செங்கோட்டையிலிருந்து ஆற்றினார். அப்போது, அவர், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் பேசினார். மோடி, கூறியதாவது:
நாம் சமீபத்தில் ஒரு புதிய தேசி கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவை வடிவமைக்கும். புதிய இந்தியாவை வடிவமைக்கும் குடிமக்களை நாம் விரைவில் பெறுவதற்கு, இந்த கல்விக் கொள்கை உதவும். உலகளாவிய குடிமக்களாக உருமாறுவார்கள், ஆனால் அவர்களின் வேர்களை அறிந்து புரிந்து கொள்ளுவார்கள்.
இன்னும் 1,000 நாட்களில்.. அனைத்து கிராமங்களும் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கில் இணையும்- மோடி அறிவிப்பு
அனைத்து பள்ளிகளிலும் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது உள்ளூர் / பிராந்திய மொழி ஒன்று கற்பிக்க வழி ஏற்படும். இந்தியாவை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் கல்விக் கொள்கை இது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.