தீபிகா படுகோனேவுக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன்!
டெல்லி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சுஷாந்த் சிங் மரண வழக்கின் விசாரணையில் போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் வெளியே வந்தது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக களத்தில் குதித்தனர்.
பாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு!
கங்கனா ரனாவத் vs தீபிகா படுகோனே
இதில் நடிகை ரியா சக்கரபர்த்தி உள்ளிட பலரும் சிக்கினர். இந்த போதைப் பொருள் தடுப்பு விவகாரம் இப்போது கங்கனா ரனாவத் மற்றும் தீபிகா படுகோன் இடையேயான மோதலாக உருவெடுத்து நிற்கிறது.
தீபிகா மேலாளருக்கு சம்மன்
தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இப்போதைக்கு கரிஷ்மா பிரகாஷிடம் விசாரணை நடத்தப்படும்.
தீபிகா படுகோனேவுக்கும் சம்மன்
இந்த நிலையில் தற்போது தீபிகா படுகோனேவுக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே நடிகைகள் சாராஅலிகான், ரகுல்பிரீத் சிங்குக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.
ஜே.என்.யூ.-வுக்கு ஆதரவு
தமிழில் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ரஜினிகாந்தின் கோச்சடையான் படங்களில் நடித்தவர் தீபிகா படுகோனே. டெல்லியில் ஜே.என்.யூ. பேராசிரியர்கள், மாணவர்கள் மீது சில மாதங்களுக்கு முன்னர் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து ஜே.என்.யூவில் நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக பங்கேற்று ஆதரவு தெரிவித்தவர் தீபிகா படுகோனே என்பது நினைவுகூறத்தக்கது.