டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொத்துக்காக மனைவியால் கொல்லப்பட்ட என்.டி.திவாரி மகன்..போலீஸ் அதிரடி நடவடிக்கை..

Google Oneindia Tamil News

டெல்லி: உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்டி திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில், அவரது மனைவி அபூர்வாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி. இவரது மகன் ரோகித் சேகர் திவாரி ஆவார். இவர் அபூர்வா என்பவரை திருமணம் செய்த கொண்டு தனியாக வசித்து வந்தார்.

ND Tiwaris Son murder case.. wife Apoorva arrested

தனியாக வசித்து வந்தாலும் கணவன் - மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக, ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்துள்ளனர்

இந்நிலையில் ரோகித் சேகர் திவாரி கடந்த வாரம் அவரது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிந்து மயங்கி விட்டதாக அவரது அம்மா உஜ்வாலாவுக்கு தொலைபேசியில் தகவல் சென்றது. இதையடுத்து ரோகித் சேகரை விரைந்து வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மனைவியிடம் இது குறித்து கேட்ட போது ரோகித் சேகர் மாரடைப்பால் துடித்ததாகவும் பின்னர் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரின் வாக்குமூலத்தில் நம்பிக்கை ஏற்படாததால், ரோகித் சேகரின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

திகுதிகு திருப்பரங்குன்றம்.. யாருங்க இந்த முனியாண்டி?.. அதிமுகவினருக்கே பார்க்கனும் போல இருக்காம்! திகுதிகு திருப்பரங்குன்றம்.. யாருங்க இந்த முனியாண்டி?.. அதிமுகவினருக்கே பார்க்கனும் போல இருக்காம்!

அங்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரோகித்தின் கழுத்து நெரிக்கப்பட்டு அதனால் தான் அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டது. இதனால் இந்த மரணம் இயற்கையானது அல்ல என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டதால், கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் ரோகித் சேகரின் மனைவி அபூர்வா மீது சந்தேகம் வலுத்தது.

சொத்துக்காக அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர். இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில், அவரது மனைவி அபூர்வாவை போலீஸார் தற்போது கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Uttar Pradesh chief minister ND Tiwari's son Rohit Shekhar' murder case his wife Apoorva was arrested by the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X