ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் வீண் போகலை.. தமிழகத்தில் திமுக-காங் கூட்டணி அமோக வெற்றி.. என்டிடிவி சர்வே
டெல்லி: தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் வெற்றி பெறும் என என்டிடிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலூர் தவிர்த்து மற்ற 38 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இன்றுடன் 7-ஆம் கட்ட இறுதி கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்தன.
இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் மக்களிடம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் என்டிடிவி நிறுவனம் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதிமுகவை காலி செய்த திமுக அலை.. 34 தொகுதிகளை வெல்லுமாம்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
1 இடத்தில் வெற்றி
அதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 38 லோக்சபா தொகுதிகளில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வெறும் 11 இடங்களிலும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
கடும் உழைப்பு
பெரும்பாலான கருத்துகணிப்புகளிலும் தமிழகத்தை பொருத்தமட்டில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தது.
கடுங்கோபம்
திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார். நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், பெட்ரோல் டீசல், எரிவாயு விலையுயர்வு, ஹைட்ரோகார்பன், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்டவைகளில் பாஜக மீது தமிழகம் கடுங்கோபத்தில் உள்ளது.
37 தொகுதிகளில்
இது புரியாமல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததே பெரும் சரிவுக்கு காரணம். மற்றொரு காரணம் ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக தேர்தலை அதிமுக சந்திக்கிறது. எனவே இதிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்றது ஜெயலலிதா என்ற ஒற்றை ஆளுமையால் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
தோல்விக்கான காரணம்
ஆனால் இந்த முறை படுதோல்வியை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் இதற்கு பாஜகவுடன் கூட்டணி மற்றும் ஜெயலலிதா இல்லாதது ஆகியவையே காரணமாக சொல்லப்படுகிறது.