தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒப்புதல்.. எந்த கதிர்வீச்சு அபாயமும் இல்லை.! மத்திய அரசு
டெல்லி: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் நாட்டிலேயே முதல் முறையாக தேனி மாவட்டத்தில் தான் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது தேனி பொட்டிபுரத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது
மேலும் நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுப்புறத்தில் எந்த பாதிப்பும் வராது எனவும் மத்திய அணுசக்தி துறைதகவல் தெரிவித்துள்ளது மேலும் இந்த ஆய்வகத்தால் எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது
நாட்டில் முதன் முதலாக 1965ம் ஆண்டு காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க வயல் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இச்சுரங்கங்கள் மூடப்பட்டு விட்டன. எனவே மீண்டும் இந்த ஆராய்ச்சியை நடத்த இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வண்டியை நிறுத்துய்யா.. நான் ஆக்சிடன்ட் பண்ணனும்.. ஆத்தாடி.. பெரிய ராவடி பொம்பளையா இருக்கும் போலயே
தற்போது இந்த ஆய்வு மையம் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்பட உள்ளது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டு ஆய்வு கூடம் அமைக்கப்படும்.
பொட்டிப்புரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஏராளமான கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு மையம் அமைந்தால்குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.