சென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு!
டெல்லி: சென்னை உட்பட 3 நகரங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வின் (NIA) கிளை அலுவலகங்கள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பயங்கரவாத செயல்கள் தொடர்பான வழக்குகளை டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. தற்போது என்.ஐ.ஏவுக்கு குவஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர் மற்றும் சண்டிகரில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிலையில் சென்னை, ராஞ்சி மற்றும் இம்பால் ஆகிய நகரங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பயங்கரவாதிகளில் செயல்பாடுகளை முடக்குவதற்கு என்.ஐ.ஏ. கிளை அலுவலகங்கள் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் சென்னையில் அமைக்கப்படுவதை பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட அக்கட்சியினர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பகவான் கிருஷ்ணர் பிறப்பிட சர்ச்சை.. கோயிலில் உள்ள மசூதியை அகற்ற கோரி வழக்கு.. விசாரிக்க ஒப்புதல்