அவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல்
டெல்லி: நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளது ஒரு தேர்தல் ஸ்டன்ட் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் சீனியர் தலைவருமான குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
வங்கிக் கடன் மோசடி மன்னனான, வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மோடி அரசுதான், இதுபோன்ற நபர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறது. அவர்கள் பணத்தையெல்லாம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்கிறது. தேர்தல் காலம் நெருங்கியதும், நீரவ் மோடி அல்லது விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவார்கள்.
வங்கிக் கடன் மோசடி.. இங்கிலாந்தில் தலைமறைவு.. மாறுவேடத்தில் லண்டனில் சுற்றிய நீரவ் மோடி கைது
வெளிநாடு போகும்போதும் திரும்ப அழைத்து வரும்போதும், பாஜக அரசின் ஒப்புதலோடுதான் எல்லாம் நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு தேர்தல் ஸ்டன்ட். இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.