டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்!

நிர்பயா வழக்கில், குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்காமல் ஆம் ஆத்மி அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா வழக்கில், குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்காமல் ஆம் ஆத்மி அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார்.

Nirbhaya case: Aam Aadmi delayed the Death Sentence execution says, Smiriti Irani

அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், குற்றவாளி முகேஷ் சிங் கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார்.

ஆனால் இந்த மனுவை டெல்லி ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் நிராகரித்தனர். நிர்பயா வழக்கில் புதிய தூக்கு தண்டனை தேதியை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நிர்பயா வழக்கில், குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்காமல் ஆம் ஆத்மி அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், நிர்பயா வழக்கில், குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு கொடுத்து பல வருடம் ஆகிறது.

நிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி! நிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி!

ஆனால் அதை இன்னும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவில்லை. அவர்களின் சீராய்வு மனுக்கள் 2018லேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆம் ஆத்மி அரசின் கட்டுப்பாட்டின் கீழ், டெல்லி திகார் சிறை செயல்படுகிறது.

ஆனால் அதை இன்னும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவில்லை. நிர்பயாவின் அம்மா பலமுறை கோரிக்கை விடுத்தும் இதை அவர்கள் நிறைவேற்றவில்லை. மாறாக நிர்பயா வழக்கின் ஒரு குற்றவாளிக்கு நிதி உதவி செய்தது.

18 வயதிற்கு குறைவான குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் பணமும், தையல் எந்திரமும் கொடுத்தது. அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள். அவர்களுக்கு நிர்பயா அம்மாவின் கதறல், கண்ணீர் கேட்கவில்லையா? என்று ஸ்மிரிதி இராணி கேட்டு இருக்கிறார்.

English summary
Nirbhaya case: Aam Aadmi delayed the Death Sentence execution says, Union Minister Smiriti Irani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X