மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 6-வது தமிழர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 6-வது தமிழர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2-வது மத்திய பட்ஜெட் இது.
நாடு விடுதலை அடைந்த போது நேரு அமைச்சரவையில் முதல் நிதி அமைச்சராக பதவி வகித்தவர் தமிழரான ஆர்.கே. சண்முகம் செட்டியார். நாட்டின் முதலாவது பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ல் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.
அவருக்குப் பின்னர் 1957-58; 1964- 66 கால கட்டங்களில் மத்திய அமைச்சராக இருந்தவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி. அவர் 2 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
1975-77-ல் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் சி. சுப்பிரமணியம். அவருக்குப் பின்னர் 1980-82-ல் நிதி அமைச்சர் பொறுப்பை வகித்தவர் ஆர். வெங்கட்ராமன். பின்னர் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்றார். இதுவரை ப. சிதம்பரம் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019-ல் மீண்டும் பதவியேற்ற போது நிதி அமைச்சராக தமிழரான நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது 2-வது முறையாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்,