இன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ்.. நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா?
டெல்லி: இன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ் வழங்கிய நிலையில் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்ற உறுதிப்படுத்தாத தகவல்கள் கிடைத்துள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பாக நித்யானந்தாவை போலீஸார் தேடி வருகின்றனர். கர்நாடகாவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்கும் நிலுவையில் உள்ளதால் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார்.
அவர் ஈகுவடார் நாட்டில் ஒரு தீவை வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என பெயர் வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் தனது டிவியில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
புராதான சின்னம்.. சேது சமுத்திர திட்டம்.. சு.சாமி வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சர்வதேச போலீஸ்
இந்த நிலையில் நித்யானந்தாவை சர்வதேச போலீஸார் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் சிபிஐ மூலம் சர்வதேச போலீஸை குஜராத் போலீஸார் அணுகினர்.
ப்ளூகார்னர்
இதன் அடிப்படையில் நித்யானந்தாவுக்கு எதிராக இன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இன்டர்போல் அதிகாரத்திற்குட்பட்ட 150 நாடுகளில் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
கரீபியன் தீவு
அவ்வாறு நித்யானந்தாவின் இருப்பிடம் கண்டறியப்பட்டால் அவரை கைது செய்ய ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பார்கள். இந்த நிலையில் நித்யானந்தா கியூபா, மெக்சிக்கோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூர்மை
கரீபியன் தீவில் வசிப்போருக்காக வழங்கப்படும் பெஸிஸ் பாஸ்போர்ட்டை நித்யானந்தா வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதை யாரும் உறுதி செய்யவில்லை. நித்யானந்தாவின் நடவடிக்கையை இன்டர்போல் போலீஸார் கூர்மையாக கவனித்து வருகிறார்கள்.