பெண்கள் மட்டுமா? ஆண்களுடனும் சதா உறவு?.. தடையின்றி நடக்க "அந்த" மாத்திரை.. நித்யானந்தா சீடர் பகீர்
டெல்லி: நித்யானந்தா ஆண், பெண் இருபாலருடன் உறவுக் கொள்ள செக்ஸ் மாத்திரைகளை உட்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் அவரது உடலை உருக்கி நரம்பு மண்டலத்தையும் பாதித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத சீடர் ஒருவர் தெரிவித்தார்.
நடிகை ரஞ்சிதாவுடன் ஒரே மெத்தையில் நித்யானந்தா கட்டி உருண்டது முதல் பாலியல் புகாரில் அவர் சிக்கி தலைமறைவானது வரை அனைவரும் அறிந்ததே.
தனது சித்து விளையாட்டு பேச்சாற்றல் மூலமாக வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுத்து அவர்களில் சிலர் சொத்துகளையும் விருப்பப்பட்டு ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிட்டு அங்கேயே தொண்டு செய்யும் அளவுக்கு நித்யானந்தா தேன் குழைய பேசுவார்.
லவ் லவ் லவ்!.. சமாதியில் இருந்து வரங்களை கொடுப்பேன்.. 11 மணி இரவில் பகீர் கிளப்பிய நித்யானந்தா

கைலாசா
கைலாசாவில் நித்யானந்தா இருந்தாலும் அது எங்கிருக்கிறது, எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. பனி படர்ந்த மலைகள், கடல்கள், மூடப்படாத கதவு என இவர் சொல்வதுதான் நமக்கு தெரியும். இந்த நிலையில் தினமும் சத்சங்கத்தில் தோன்றி பக்தர்களை மட்டுமல்லாமல் நம்மையும் அவரது பேச்சால் குஷிபடுத்தி வந்தார்.

டிரேட் மார்க்
ஆனால் அண்மைக்காலமாக அவரது டிரேட் மார்க் சிரிப்பில்லாமல் சத்சங்கத்தை நடத்தாமலேயே இருந்தார். இதனால் போலீஸ் கைதுக்கு பயந்து நித்யானந்தா கைலாசாவிலேயே முக்தி அடைந்துவிட்டார் என பலர் தகவல்களை பரப்பினார். என்னடா இது வம்பா போச்சேனு நினைத்த நித்யானந்தா தனது புகைப்படத்தை வெளியிட்டு திரும்பி வந்துவிட்டதாகவும் தான் சாகவில்லை என்றும் தெரிவித்தார்.

நித்யானந்தா உடல்
இந்த புகைப்படத்தில் நித்யானந்தா உடல் மெலிந்து காணப்பட்டார். மேலும் அவரது அடுத்தடுத்த பதிவுகளில் தன்னால் எழுந்து கூட உட்கார முடியவில்லை என பதிவிட்டுள்ளார். மேலும் எல்லா டெஸ்டுகளும் நார்மலாக இருந்தாலும் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என தெரிவித்தார்.

அணிகலன்கள்
எப்போதும் கம்பீரமாக நிறைய அணிகலன்களை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் எடுக்கும் நித்யானந்தாவுக்கு என்னாச்சு என மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் நித்யானந்தாவின் சீடராக இருந்தாலும் அவரது தொல்லைகளை சகித்துக் கொள்ள முடியாத சீடர்கள் பலர் அவர் குறித்த உண்மைகளை தங்களின் அடையாளங்களை மறைத்து கூறி வருகிறார்கள்.

ஆணுடனும் உறவு
அந்த வகையில் ஒரு ஊடகத்திற்கு நித்யானந்தாவின் சீடர் கூறுகையில், நித்யானந்தா ஆண்களுடனும் பெண்களுடனும் இயற்கைக்கு மாறாக உறவு வைப்பார். இதற்காக அவர் நிறைய செக்ஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார். ஏற்கெனவே அவருக்கு ஒரு முறை உடல்நலம் பாதிக்கப்பட்ட போது செக்ஸ் மாத்திரைகளை போடுவதை நிறுத்தும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள்.

நரம்பு மண்டலம் பாதிப்பா
ஆனால் அவரோ அதை கேட்கவில்லை. என்னுடனும் கட்டாயப்படுத்தி உறவு வைத்தார் என்றார். ஒரு வேளை இது போன்று இயற்கைக்கு மாறாக உறவு வைத்ததால் அவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் அவரது உடல் மெலிந்து தேஜஸ் இல்லாமல் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.