இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று இன்னமும் சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின் ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இருப்பதை நாம் பார்க்கிறோம். உலக மக்கள் தொகையில் 2-வது பெரிய நாடு இந்தியா.
நமது நாட்டில் 10 லட்சம் பேரில் 538 பேருக்குத்தான் பாதிப்பு என்பதாகவே உள்ளது. இந்தியாவில் 90% கொரோனா பாதிப்பு என்பது 8 மாநிலங்களில்தான் உள்ளது.
கல்லூரி திறப்பதே முடிவு செய்யவில்லை கல்விக் கட்டணம் வசூலிப்பது எப்படி - ஹைகோர்டில் அரசு பதில்
கொரோனா மரணங்களில் 86% 6 மாநிலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனா இன்னமும் சமூகப் பரவலாகவில்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ள்னர்.
ஒருசில உள்ளூர் இடங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்திய அளவில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என்பது யதார்த்தம்.
இவ்வாறு ஹர்ஷ்வர்தன் கூறினார்.