சொத்து குவிப்பு வழக்கு- முலாயம் சிங், அகிலேஷுக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
முலாயம்சிங், அவரது மகன்க அகிலேஷ், பிரதீக் யாதவ் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் இன்று சிபிஐ புதிய பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது.
அதில், 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் முலாயம்சிங் மற்றும் அகிலேஷிடம் சொத்து குவிப்பு தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை. தொடக்கத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வழக்குக்கு முகாந்திரம் இல்லை என தெரியவந்தது.
ராகுல், முலாயம், மேனகா காந்தி.. விஐபி வேட்பாளர்கள் வெற்றி ரொம்ப கஷ்டம்.. ஷாக்கிங் எக்ஸிட் போல்
தற்போதும் இவ்வழக்கில் எந்த புதிய ஆதாரங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.