வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
டெல்லி: வேலூர் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வேலூர் லோக்சபா தேர்தல் களைகட்டி வருகிறது. வேலூர் தொகுதியில் எப்படியும் வென்றாக வேண்டும் என திமுக, அதிமுக இரண்டுமே முனைப்பு காட்டுகின்றன. நாம் தமிழர் கட்சியும் இம்முறையும் கணிசமான வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறது.
வேலூர் தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வேலூர் தேர்தலில் தீவிரம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் டெல்லி சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது வேலூர் தொகுதி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாசா எப்படி உள்ளே வந்தது? சந்திரயான் 2 மூலம் அமெரிக்கா நிலவிற்கு அனுப்ப போகும் ஸ்பெஷல் பார்சல்!
மேலும் சிகிச்சைக்காக தாம் வெளிநாடு செல்வது குறித்தும் அமித்ஷாவிடம் ஓபிஎஸ் ஆலோசித்தார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.