டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி பேசியது தவறுதான்..தனியாளாக எதிர்த்த தேர்தல் அதிகாரி.. என்ன நடந்தது தேர்தல் ஆணைய விசாரணையில்?

பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விசாரணையில் மோடியை எதிர்த்த ஒரே அதிகாரி என்ன நடந்தது ?

    டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

    பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது. இவர்கள் இருவர் மீதும் 6க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது. இதில் இரண்டு வழக்குகள் மீது ஏற்கனவே தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருக்கிறது.

    இந்த இரண்டு புகார்களில் தேர்தல் ஆணையம் ஒரு மனதாக முடிவெடுக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் விசாரணை அதிகாரிகள் மூன்று பேரில் ஒரு அதிகாரி மட்டும் மோடிக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.

    இரண்டு கேஸ்கள்

    இரண்டு கேஸ்கள்

    பிரதமர் மோடி மீது தொடுக்கப்பட்ட புகார்களில் 2 புகார்கள் மீதான நடவடிக்கை மட்டும் இப்போது எடுக்கப்பட்டு இருக்கிறது.

    புகார் 1: பிரதமர் மோடி வர்தாவில் பேசும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெஜாரிட்டி மக்களை பார்த்து பயப்படுகிறார். அதனால்தான் அவர் மைனாரிட்டி இருக்கும் வயநாட்டில் சென்று போட்டியிடுகிறார், என்று குறிப்பிட்டார்.

    புகார் 2: பிரதமர் மோடி லாத்துரில் பேசும் போது, நாம் நம் ராணுவ வீரர்களுக்காக வாக்களிக்க வேண்டும். முதல்தலைமுறை வாக்காளர்கள் ராணுவ வீரர்களை மனதில் வைத்தும், நாம் நடத்திய பாலக்கோடு தாக்குதலை நினைவில் கொண்டும் வாக்களிக்க வேண்டும், என்றார்.

    சாத்வி பிரக்யாவை இந்துத்துவாவின் புதிய முகமூடியாக முன்வைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சாத்வி பிரக்யாவை இந்துத்துவாவின் புதிய முகமூடியாக முன்வைக்கும் ஆர்.எஸ்.எஸ்.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    இந்த இரண்டு புகாரில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு பேச்சிலும் மோடி எந்த விதமான தவறான தகவலையும் பேசவில்லை என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இதனால் இது தொடர்பான இரண்டு புகாரில் இருந்தும் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.

    யார் முடிவு

    யார் முடிவு

    மொத்தம் மூன்று பேர் இந்த புகாரை விசாரித்தனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அதிகாரிகள் அசோக் லவசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோரை விசாரணை நடத்தினார்கள். இதில் இரண்டு அதிகாரிகள் மோடி மீது தவறு இல்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

    ஒருவர் எதிர்த்தார்

    ஒருவர் எதிர்த்தார்

    ஆனால் இந்த மூன்று அதிகாரிகளில் ஒருவர் மட்டும், மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஆனால் இவர் யார் என்ற விவரம் வெளியாகாது. மோடி இப்படி பேசியது மிக மிக தவறு என்று அவர் கூறி இருக்கிறார். ஆனாலும் மெஜாரிட்டியாக இரண்டு அதிகாரிகள் மோடிக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தனர். இதனால் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    English summary
    Only two officers gave clean chit to Modi: One poll officer opposed PM's speech to the core.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X