அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் #ConstitutionDay
Recommended Video
டெல்லி: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்தின.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியல் சாசன் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்., பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனால் இந்த நிகழ்வை ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக ஒன்று திரண்டு ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
#WATCH #ConstitutionDay: Congress interim President Sonia Gandhi reads a copy of Indian Constitution in front of the Ambedkar Statue in the Parliament. Leaders of Opposition parties are protesting in Parliament premises today, opposing govt formation in Maharashtra by BJP. pic.twitter.com/5QQiN7TMvh
— ANI (@ANI) 26 November 2019
மகாராஷ்டிராவில் ஜனநாயகப் படுகொலை செய்ததை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்களை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அப்போது வாசித்தார்.
Delhi: Leaders of Opposition parties, including Congress' Sonia Gandhi, former PM & Congress leader Manmohan Singh and Shiv Sena's Arvind Sawant, hold a protest in front of the Ambedkar Statue in Parliament. https://t.co/vjsVAUcg1F pic.twitter.com/3qM3m7NGvI
— ANI (@ANI) 26 November 2019
இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி, சிவசேனாவின் அரவிந்த் சாவத், திமுகவின் ஆ. ராசா, மார்க்சிஸ்ட் கட்சியின் ரெங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.