கெத்து.. ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தாங்க! பிரதமர் மோடிக்கே போன்போட்டு பேசிய யஷ்வந்த் சின்ஹா!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு போன் செய்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் முடிவுக்கு வருகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ல் நடைபெற உள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி
வேட்புமனுத்தாக்கலுக்கு ஜூன் 29 கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூலை 21ல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர்
தற்போது ஜனாதிபதி தேர்தலில் இருமுனை போட்டி நிலவுகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறக்கப்பட்டுள்ளார்.
பாஜகவுடன் நெருக்கம்
யஷ்வந்த் சின்கா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் ஐஏஎஸ் பதவி வகித்தார். அதன்பிறகு பாஜக கட்சியில் இணைந்து செயல்பட்டார். தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்தார். இதனால் இவருக்கும் பாஜக தலைவர்கள் நெருக்கமாக உள்ளனர்.
Recommended Video
பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங்கிடம் ஆதரவு
திரெளபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா ஆகியோர் கட்சி பாகுபாடு, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் இன்று யஷ்வந்த் சின்கா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியேரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். இதேபோல் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனையும் அவர் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.
திங்கட்கிழமை மனுத்தாக்கல்
இதுபற்றி தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‛‛எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்'' என்றார். மேலும் யஷ்வந்த் சின்கா வரும் திங்கட்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
பாஜக வேட்பாளர் மனுத்தாக்கல்
முன்னதாக இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பிறகு அவர் தனது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். திரெளபதி முர்முவின் வேட்புமனுத்தாக்கலில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தையும் அவர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். விரைவில் அவர் தமிழகம் வர உள்ளார். இதேபோல் பாஜகவின் தலைவர்கள் திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக பல்வேறு கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினரிடம் அவர்கள் ஆதரவு கோரியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் யஷ்வந்த் சின்கா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கிடம் ஆதரவு கோரியுள்ளார்.