டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப சிதம்பரம் தாக்கல் செய்த மனு.. திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்திற்கு 5 நாள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

    ஐஎக்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை மறுத்தது. இதையடுத்து கடந்த புதன்கிழமை (ஆக 21) ப சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

     p chidambaram anticipatory bail petition enqury on supreme court today,

    ஆனால் அந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்ட நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என பட்டியலிப்பட்டது.

    உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் பானுமதி மற்றும் ஏ எஸ் போபண்ணா ஆகியோரது அமர்வு முன்பு சற்று முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரிப்பதாக ஒத்திவைத்தனர்.

    ஏற்கனவே ப சிதம்பரம் புதன்கிழமை கைதாகிவிட்ட நிலையில், வரும் திங்கள்கிழமை மீண்டும் சிபிஐ நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    p chidambaram anticipatory bail case inquiry on supreme court today, petition may reject because already p chidambaram arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X