ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார் ப.சிதம்பரம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பண மோசடி செய்ததாக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் சுமார் 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்தார். இந்த நிலையில் அவர் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சிறைவாசிகளுக்கான பரோல், பொதுமன்னிப்பு முறைகளில் மாற்றம் தேவை- வைகோ வலியுறுத்தல்
ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி , ப.சிதம்பரத்தை 14 நாட்கள் திகார் சிறையில் அடைக்க செப்டம்பர் 5-ஆம் தேதி உத்தரவிட்டார். அவர் வரும் 19-ஆம் தேதி வரை சிறையில் இருக்க நேரிடும்.
இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.