Breaking News Live: ப. சிதம்பரத்திற்கு 30ம் தேதி வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ கோர்ட் அதிரடி
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் கோரிக்கை மனு மீதான விசாரணை இன்னும் சில நிமிடங்களில் உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவரின் காவல் இன்றோடு முடிகிறது.
இதையடுத்து அவரது கஸ்டடியை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைக்க உள்ளது. இதே வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறையும் முயன்று வருகிறது. இதையடுத்து சிபிஐ நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ப. சிதம்பரம் சார்பாக ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்க உள்ளது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.