74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 74ஆவது பிறந்தநாள் விழாவின் போது அவர் திகார் சிறையில் இருப்பது அவரது தொண்டர்கள், குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், இன்னாள் மாநிலங்களவை எம்பியுமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். அவர் இந்த வழக்கில் கடந்த ஆண்டு 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அது போல் ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
ஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்
முன்ஜாமீன்
இந்த இருவழக்குகளில் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அமலாக்கத் துறையும் சிபிஐயும் அவர்களுக்கு முன்ஜாமீன்தரக் கூடாது என கோரிய நிலையில் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
ப.சிதம்பரம் வழக்கு
இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் தர மறுத்த நீதிபதி ஷைனி, அவரை 14 நாட்களுக்கு திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தனது வயதையும் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு தன்னை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என ப.சி. கோரியும் அவரது பேச்சு எடுபடவில்லை.
ஜாமீன் இல்லை
இதையடுத்து அவர் அங்கு அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்ட நாளே சிதம்பரத்தின் 74ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அவரை ஜாமீனில் எடுக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். எனினும் அது நடக்கவில்லை.
தொண்டர்கள் வாழ்த்து
இந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவரது தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அது முடியாமல் போயிற்று. அவரது நீதிமன்றக் காவல் 19-ஆம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.