"நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள், இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.." வீடியோ வெளியிட்ட ப.சிதம்பரம்!
டெல்லி: நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் இதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று கூறி, ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்த வீடியோ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பெயரில் இயங்கக்கூடிய யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்கள் அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தைகுட்டிகளுடன் நடந்து செல்வது, போலீஸ் தடியடி நடத்துவது, ரயில்களில் சிக்கி சிலர் மாண்டு போனது என அந்த வீடியோ பதிவு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.
மேலும், டெல்லியில் நடந்து சென்ற குழந்தைத் தொழிலாளர்களுடன், ராகுல் காந்தி நேரில் சென்று சாலை ஓரமாக அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டது, பின்னர் அவர்களை காங்கிரஸ் கட்சி சொந்த வாகனங்களில் ஏற்றி அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
தானம் தர போன இடத்தில்.. பிச்சைக்கார பெண்ணுடன் காதல்.. அப்படியே கல்யாணத்தையும் முடித்த இளைஞர்!
ரயிலில் அடிபட்டு தொழிலாளர்கள் உடல் துண்டாகி கிடந்தபோது, அருகே காய்ந்து போன ரொட்டித் துண்டுகள் சிதறிக்கிடந்த காட்சியும் இந்த வீடியோவில் இடம் பெற்று கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்துள்ளது.
நெஞ்சில் ஈரம் உள்ள மனிதர்கள் இதனைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் https://t.co/RQXGSLLtbB
— P. Chidambaram (@PChidambaram_IN) May 24, 2020
இது ஹிந்தி மொழியில் இருக்கக்கூடிய ஒரு வீடியோதான் என்றபோதிலும், எந்த மொழி மக்களாக இருந்தாலும் புரிந்துகொள்ளும் வகையில்தான் இருக்கிறது. ஆம்.. அன்பு, மனிதாபிமானம், கருணை போன்றவற்றுக்கு மொழி எது?