வெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ
Recommended Video
டெல்லி: இந்திய எல்லையில் ராணுவத்தினருடனான தாக்குதலில் உயிரிழந்த இரு பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய எல்லை பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது.
கடந்த 10-ஆம் தேதி ஹாஜிபூர் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நுழைந்தது. பின்னர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
10 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்வதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் நம் இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
#WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO
— ANI (@ANI) September 14, 2019
அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர். இந்திய எல்லையில் வெள்ளைக் கொடியுடன் வந்த பாகிஸ்தான் வீரர்கள் அவர்களின் உடல்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.