வெட்கம்.. ஒடிசா போர் விமான விபத்தை போட்டு "வீரத்தை" காண்பிக்கும் பாகிஸ்தான்
Recommended Video
டெல்லி: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் மீடியாக்கள் தம்பட்டம் அடித்தது, ஒடிசாவில் விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கிய படத்தை என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்வாமா தாக்குதல் முதலே இந்தியா- பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் பாகிஸ்தானில் வான் வழித் தாக்குதல் நடத்திய இந்தியா அங்கிருந்த தீவிரவாத இயக்கத்தின் முகாம்களை அழித்தது.
இதை இந்தியா வெற்றி விழாவாக கொண்டாடியது. இதனால் அவமானம் அடைந்த பாகிஸ்தான் அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்றும் காலி இடத்தில்தான் இந்தியா குண்டுவீசியது என்றும் டன்கணக்கல் பொய் சொல்லியது.
விரட்டி
இதையடுத்து ஆத்திரம் தாளாத பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த போர் விமானங்களை அனுப்பியது. எனினும் அதை இந்தியா சாதுர்யமாக விரட்டி அடித்தது.
விமானங்கள்
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் கூறுகையில் இந்திய எல்லைக்குள் இன்று அதிகாலை புகுந்த 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்.
பாகிஸ்தான் ஊடகங்கள்
இந்திய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார் என கஃபூர் பரபரப்பு தகவலை அளித்திருந்தார். இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது போன்ற சில புகைப்படங்களை பாகிஸ்தான் ஊடகங்கள் பெரிதுப்படுத்தி போட்டன.
பாகிஸ்தான்
இது போன்ற தாக்குதல் நடைபெறவே இல்லை என இந்தியா மறுத்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியிட்ட புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்தால் இத்தனை பட்டும் இந்த பாகிஸ்தான் திருந்தாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நெல் வயலுக்குள்
கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்திற்குள்பட்ட குதார்ஷாய் என்ற இடத்தில் உள்ள நெல் வயலுக்குள் விழுந்து நொறுங்கியது.
தம்பட்டம்
இந்த புகைப்படங்களை எடுத்து இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தம்பட்டம் அடித்து கொள்கிறது ஊர்ஜிதமாகிறது. தங்கள் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ளவும் இயலாமையை மூடி மறைக்கவும் எத்தகைய எல்லைக்கும் பாகிஸ்தான் செல்லும் என தெரிகிறது.