திமுக எம்பி ஒருவர் உள்பட... 25 எம்பிக்களுக்கு... கொரோனா தொற்று உறுதி!!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு இன்று வந்த 25 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பாஜக எம்பிக்கள் 12, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் 2 பேர், சிவ சேனா, திமுக, ஆர்எல்பி கட்சிகளில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 25 பேரில் 17 பேர் மக்களவை எம்பிக்கள், 9 பேர் மாநிலங்களவை எம்பிக்கள் என்பது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி நடந்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. நேற்றே நாடாளுமன்றத்துக்கு கொரோனா பாதுகாப்பு கிட் கொண்டு வரப்பட்டு இருந்தது. நேற்றும், இன்றும் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த பாஜக எம்பி சுகந்தா மஜூம்தர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக நேற்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
மீனாட்சி லேகி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் சாஹிப் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் செர்ந்தாஹ் திமுக எம்பி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் யார் என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 785 எம்பிக்களில் 200 பேர் 65 வயதுக்கும் அதிகமானவர்கள். இதற்கு முன்னதாக 25 எம்பிக்கள் மற்றும் 7 மத்திய அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இவர்களில் அமைச்சர் அமித் ஷாவும் ஒருவர், இவருக்கும் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை நடந்து வருவதாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் ராஜ்ய சபையில் உறுப்பினர்கள் தனிமனித இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனர். மேலும், உறுப்பினர்கள் தங்களது வருகையை குறிப்பிட தனியாக ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் மாஸ்க், முகத்தை மறைக்கும் ஷீல்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா தொடங்கியது- திமுக எம்.பி.க்கள் 3 பேரும் தமிழில் பதவியேற்றனர்