நாடாளுமன்றத்தில் கத்தியுடன் நுழைந்தவர் நவீன சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர்
டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர் ஹரியானாவில் உள்ள தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவரும் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவருமான குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் என தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு நபர் நுழைந்தார். அப்போது அவர் ராம் ரஹீம் என கோஷம் எழுப்பியபடி வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். பிடிபட்ட நபர் டெல்லி லட்சுமி நகரை சேர்ந்த சாகர் இன்ஸா என்று தெரியவந்துள்ளது. பாலியல் வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பா பேசலையே.. கண் கலங்கிய மகள்.. "குமரி"யாரையே மிஞ்சிய "குமாரி" விஸ்வரூபம் எடுத்த கதை!