கை தட்டல், சைரன் ஒலி, தட்டில் அடித்து சத்தம்.. மருத்துவ ஊழியர்களுக்காக மாஸ் காட்டிய இந்தியா
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று மருத்துவ ஊழியர்கள் சேவையை பாராட்டும் வகையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக கை தட்டினர்.
Recommended Video
கடந்த வியாழக்கிழமை, இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இந்த சுய ஊரடங்கு உத்தரவு அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும், மாலை 5 மணிக்கு ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு பால்கனி அல்லது ஜன்னலோரம் அல்லது வாசலிலாவது வந்து நின்று கை தட்ட வேண்டும், அல்லது சைரன் ஒலிக்க வேண்டும், அல்லது விசில் அடிக்க வேண்டும் என்பதுபோல கேட்டுக்கொண்டார்.
#WATCH Uttarakhand: People come out on their terraces and balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services amid. #CoronavirusPandemic. Visuals from Dehradun pic.twitter.com/5Jn0rYGD9R
— ANI (@ANI) March 22, 2020
அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க, மக்கள் தங்கள் மொட்டை மாடிகளிலும் பால்கனிகளிலும் நின்று கைதட்டியும், பாத்திரங்களை அடித்தும், ஆரவாரம் செய்தனர். டேராடூன் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இது.
#WATCH Delhi: People wave the tricolour outside Jama Masjid to express their gratitude to those providing essential services amid #CoronavirusPandemic. pic.twitter.com/byHlaBgFbR
— ANI (@ANI) March 22, 2020
டெல்லி, ஜும்மா மசூதிக்கு வெளியே மக்கள் தேசிய கொடியை அசைத்து மருத்துவ சேவைகளை வழங்குபவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
#WATCH Punjab: People come out on their balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services amid #CoronavirusPandemic. Visuals from Amritsar. pic.twitter.com/PUJgDlCBId
— ANI (@ANI) March 22, 2020
மருத்துவ சேவைகளை வழங்குவோருக்கு நன்றி தெரிவிக்க மக்கள் கைதட்டியதோடு, பாத்திரங்களை அடித்தும் ஒலி எழுப்பினர், விதவிதமான மணிகள் மூலமும் ஒலி எழுப்பினர். இது பஞ்சாப் மாநிலம். அமிர்தசரஸ் காட்சிகள்.
#WATCH: People come out on their balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services amid #CoronavirusPandemic, in Mumbai, Maharashtra. pic.twitter.com/dIzBYF5ELq
— ANI (@ANI) March 22, 2020
மும்பை குடியிருப்பு ஒன்றில், மக்கள் தேசியக் கொடியுடன், கைதட்டியும், இந்தியாவை வாழ்த்தியும் கோஷமிட்டனர்
இன்னும், தீயணைப்பு படை வீரர்கள், வாகனங்களின் சைரனை ஒலிக்க விட்டு தங்கள் ஆதரவை கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.