டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.. 5வது நாளாக தொடர்ந்து அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: திங்களன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 பைசாவும் டீசல் விலை 17 பைசாவும் உயர்த்தப்பட்டது. அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விலை 70 அமெரிக்க டாலரை எட்டியதால் இந்த உயர்வு ஏற்பட்டது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .75.69 ஆக உயர்ந்துள்ளது - இது 2018 நவம்பர் மாதத்திற்கு பிறகு மிகவும் அதிகமாகும்.

Petrol prices up 15 paisa, diesel by 17 paisa as crude hits $ 70 mark

கச்சா எண்ணை வளமுள்ள மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 பைசா மற்றும் டீசல் விலை 17 பைசா அதிகரித்துள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு, ரூ .68.68 ஆக உயர்ந்தது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக விலைவாசி உயர்வை சந்தித்துள்ளது. ஈரான் தளபதியை அமெரிக்கா படுகொலை செய்த பின்னர், அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும்? பரபரப்பு தகவல்கள்நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும்? பரபரப்பு தகவல்கள்

எனவே கச்சா, எண்ணெய் விலைகள் உயர்ந்தன, தங்கம் வரலாறு காணாத விலைவாசியை சந்தித்துள்ளது. பங்குச் சந்தைகளும் திங்கள்கிழமை சரிவை சந்தித்தன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஈரானுக்கு எதிராக "பெரும் பதிலடி" கொடுப்பதாக எச்சரித்துள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தில் இது மேலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

English summary
Petrol prices on Monday were hiked by 15 paisa a litre and diesel rates were increased by 17 paisa, The latest hike came as global oil prices hit USD 70 mark in the wake of escalating US-Iran tensions fanning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X