இந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய-அமெரிக்க இடையேயான நட்புறவு மேலும் வலிமை பெறும் என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாஜ அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;
''அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த பிடனுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன். உலக அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்துக்கள் கொண்டவை. இந்தியா அமெரிக்கா இடையேயான நட்பை புதிய அதிபர் ஜோ பிடன் இன்னும் உயரத்துக்கு எடுத்துச்செல்வார் என நம்புகிறேன்.''
இவ்வாறு மோடி தனது வாழ்த்துச் செய்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது;
''அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்துக்கு வாழ்த்துகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் தனது வாழ்த்தை கூறியுள்ளார்.
இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தொடங்கி உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் ஜோ பிடனுக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.