Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா பரவல்.. இந்த இரண்டும் ரொம்ப முக்கியம்.. விட்ற கூடாது... ஆலோசனை கூட்டத்தில் மோடி அறிவுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பரிசோதனை மற்றும் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்துமாறு இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1.45 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

PM Modi to hold Covid-19 review meeting with top officials at 8pm

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1,341 கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால், இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் இதில் பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும். இதற்கு வேறு ஏதும் மாற்று இல்லை என மோடி தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்கள் மூலம் கொரோனா படுக்கைகளை ஏற்படுத்த மோடி அறிவுறுத்தினார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவும் அதன் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளவும் பிரதமர் அறிவுரை வழங்கினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் சில மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+