துபாயில் நடைபெறும் உலக பருவநிலை மாநாடு.. அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி.. ஏன் முக்கியம்?
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
சர்வதேச அளவில் பெட்ரோலிய எரிபொருட்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்து வருகிறது. உலக வெப்பம் அடைவதால், காலநிலை மாற்றம், வரலாறு காணாத வறட்சி, பெருவெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் அழிவுகள் அதிகரிகத்து வருகின்றன. உலகம் வெப்பம் அடைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.

இதனை அடிப்படையாக கொண்டு ஐக்கிய நாடுகள் பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு பிரேசிலில் பருவநிலை தொடர்பான முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பருவ நிலை உச்சி மாநாடு எகிப்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி புறப்பட்டார்: இந்த நிலையில், சி.ஓ.பி 28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடு நாளை தொடங்கி டிசம்பர் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் , இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார்.
டெல்லியில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் பங்கேற்று விட்டு நாளை மாலை இந்தியாவுக்கு திரும்புவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பருவநிலை செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரை நிகழ்த்த உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பது மட்டும் இன்றி மூன்று உயர்மட்ட கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.
ஏன் முக்கியம்: முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் புறப்படும் முன்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், "பருவ நிலை விவகாரத்தில் இந்தியா எப்போதுமே சொன்னபடியே நடந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன், காடு வளர்ப்பு ஆகிய துறைகளில் நமது சாதனைகள் நமது பூமித்தாயின் மீதான அர்ப்பணிக்கு சான்று ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளர்.
பருவநிலை மாறுபாடு அதிகரித்து வரும் நிலையில், பாரிஸ் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தீவிரமாக செயல்படுத்துவது தொடர்பாக இந்த மாநாட்டில் ஆலோசிக்க உள்ளன. மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி சில நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications