இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க நான்கு முனைகளில் செயல்படுகிறோம்... சொல்வது பிரதமர் மோடி!
டெல்லி: இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு ஒரே நேரத்தில் நான்கு முனைகளில் செயல்படுகிறது. என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கொரோனா கால கட்டத்துக்கு பிறகு இந்திய சுகாதாரத்துறைக்கான மரியாதை அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கான தேவை உலகம் முழுவதும் உயரப் போகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
சுகாதாரத் துறை தொடர்பான பட்ஜெட் செயல்படுத்தல் குறித்த காணொளியில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்றின்போது இந்தியாவின் சுகாதாரத் துறை காட்டிய வலிமையை உலகம் குறிப்பிட்டுள்ளது, கொரோனா கால கட்டத்துக்கு பிறகு இந்திய சுகாதாரத்துறைக்கான மரியாதை அதிகரித்துள்ளது.
எதிர்காலத்தில், இந்திய மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கான தேவை உலகம் முழுவதும் உயரப் போகிறது,இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு ஒரே நேரத்தில் நான்கு முனைகளில் செயல்படுகிறது. நோயைத் தடுப்பது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் சுகாதார அணுகல், சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சுகாதார நிபுணர்களின் தரம் மற்றும் அளவு அதிகரித்தல் ஆகியவையே அந்த நான்கு முனை ஆகும்.
தமிழகத்தில் மோசமாக பரவும் கொரோனா.. கவனமாக இல்லாவிட்டால் மகாராஷ்டிரா நிலைதான்.. ராதாகிருஷ்ணன்
சுகாதாரத் துறைக்கு இப்போது ஒதுக்கப்பட்ட பட்ஜெட் மிகவும் தனித்துவமானது. இந்தத் துறை மீதான அரசின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது. மேட் இன் இந்தியா தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து காசநோயை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். முகமூடிகளை அணிவது, ஆரம்பகாலத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே காசநோயை தடுப்பதில் முக்கியம் ஆகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.